Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஞான ஈஸ்வரர் கோவிலில் மூலவர் ...  புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி வழிபாடு புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்துார் பத்ரகாளியம்மன் கோயிலில் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்துார் பத்ரகாளியம்மன் கோயிலில் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி

பதிவு செய்த நாள்

16 பிப்
2026
12:02

ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் முதலியார் பட்டி தெரு பத்ர காளியம்மன் கோயிலில் நடந்த மகா சிவராத்திரி வழிபாட்டில், கொதிக்கும் நெய்யில் 93 வயது மூதாட்டி முத்தம்மாள் கையால் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைக்கும் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.


இக்கோயிலில் மகா சிவராத்திரியன்று கைகளால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைக்கும் நிகழ்வு நுாறாண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. அதன்படி நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு 11:30 மணிக்குமேல் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடும் வழிபாடு துவங்கியது. இதில் 93 வயது மூதாட்டி முத்தம்மாள், அடுப்பில் கொதித்த நெய்யை எடுத்து திருநீருடன் கலந்து தன் நெற்றியிலும் பின்னர் பூசாரிகள், பக்தர்களுக்கும் பூசினார். பின் அம்மனை வணங்கி விறகு அடுப்பில் நெய் கொதித்த நிலையில் கருப்பட்டி, அரிசி மாவு கலந்த அப்ப உருண்டைகளை மிதக்க விட்டு அதனை கையால் எடுத்து பனை ஓலை பட்டியில் சேகரித்தார். அவருக்கு உதவியாக கோயில் பூசாரிகள் சுந்தர மகாலிங்கம், இருளப்பன், முருகன் உடனிருந்தனர். பின் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அம்மனுக்கு அப்பங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக அப்பங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி மதுரை, ஆண்டிபட்டி, சென்னை, பெங்களூர், டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 
temple news
இடையகோட்டை; இடையகோட்டை அருகே வலையபட்டி ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி உற்சவத்தை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: வெள்ளியங்கிரி மலையில், கடந்த 16 நாட்களில், 55 ஆயிரம் பக்தர்கள் மலையேறி, சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
சூலூர்; முத்துக் கவுண்டன் புதூர் அங்காளம்மன் கோவிலில், குண்டம் மற்றும் தேர் திருவிழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar