அழகர்கோவிலில் சிவராத்திரி வழிபாடு; குலதெய்வம் தரிசிக்க குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2026 12:02
அழகர்கோவில்: அழகர்கோவிலில் சிவராத்திரி குலதெய்வ வழிபாடு விசேஷமானது. அழகர்மலையில் உள்ள சுந்தரராஜ பெருமாள், சோலைமலை முருகன், காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமி பலருக்கும் குலதெய்வ ஸ்தலங்களாக உள்ளன. நேற்று மஹா சிவராத்திரியை முன்னிட்டு கருப்பண்ண சுவாமி சன்னதி கதவுகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் மனமுருகி தரிசித்தனர். பொங்கலிட்டு, அன்னதானம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பல்வேறு ஊர்களில் இருந்து விரதம் மேற்கொண்டு வந்த பக்தர்கள், காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர். அழகர்மலை மீதுள்ள நுாபுர கங்கையில் தீர்த்தமாடி ராக்காயி அம்மனை வழிபட்டனர். சோலைமலை முருகன் கோயிலிலும் வழிபாடுகள் நடந்தன.