மகா சிவராத்திரி விழா; முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2026 01:02
ராமநாதபுரம்: ராமநாதபுரம், வெளிப்பட்டணம் பகுதியில் உள்ள முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா பிப்.6 ல் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலையில் அம்மன் தேரோட்டம் நடந்தது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு தர்மதாவள விநாயகருக்கு நான்கு காலமும், முத்தால பரமேஸ்வரி அம்பாள், நாகலிங்கேஸ்வரருக்கு ஏக காலமும் சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. வெளிப்பட்டணம் சவுபாக்கிய நாயகி, ரெத்தினேஸ்வரருக்கு 4 காலமும் தர்ம முனீஸ்வரருக்கு ஏக காலமும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இரவு அம்பாள் புஷ்ப அங்கி சேவை., சப்தாவர்ணம் வழிபாடு நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு ரெத்தினேஸ்வரர் திருக்குளத்தில் மஞ்சள் நீராடல் விழா நடக்கவுள்ளது.
* கீழக்கரை மாயாகுளம் ஊராட்சி தொண்டாலை மேல்கரையில் உள்ள முனியய்யா கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் முனியய்யாவுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பெண்கள் பொங்கலிட்டனர். சிவராத்திரி உற்ஸவ விழாவை முன்னிட்டு கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.