Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர் கோவிலில் முடி ... திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் கருட சேவை! திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் கருட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
18 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 ஜன
2013
11:01

சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலிலுள்ள 18 அடி உயர ஆஞ்சநேய சுவாமியின் ஜெயந்திவிழா நாளை கோலாகலமாக நடக்கிறது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் வடக்கு பிரகாரத்திலுள்ள 18 அடி உயர ஆஞ்சநேய சுவாமியின் ஜெயந்திவிழா இன்று காலை 5 மணிக்கு கணபதிஹோமத்துடன் துவங்குகிறது. காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகம், 10.30க்கு தாணுமாலய சுவாமிக்கு அபிஷேகம், தொடர்ந்து உச்சகால பூஜை, மாலை 6க்கு உதய மார்த்தாண்ட விநாயகருக்கு தீபாராதனை, காலபைரவருக்கு தீபாராதனை நடக்கிறது. நாளை காலை 4க்கு ஸ்ரீராமபிரானுக்கு அபிஷேகம், 6க்கு ஆஞ்சநேய சுவாமிக்கு ஷோடச அபிஷேகம் நடக்கிறது. களபம், பால், தயிர், நெய், குங்குமம், பன்னீர், சந்தனம், தேன், இளநீர் உட்பட 16 வகையான பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம், நடக்கிறது. காலை 10 முதல் இரவு 8 மணிவரை தொடர் அன்னதானம், பகல் 1க்கு ஆஞ்சநேய சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 5க்கு பஜனையும் நடக்கிறது. மாலை 6க்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகமும், தொடர்ந்து 18 அடி உயர ஆஞ்சநேய சுவாமியின் கழுத்தளவு வரை பலவித வண்ண வாசனை மலர்களால் புஷ்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 10க்கு சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும் ஸ்ரீராம ஆஞ்சநேய பக்தர்கள் டிரஸ்டியினரும் செய்து வருகின்றனர்.

சுசீந்திரம் ஆஞ்சநேயர் வரலாறு: 1740 ஜனவரி மாதம் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா மகாராஜாவின் படைவீரர்களின் ஒரு பிரிவினர் குளச்சலில் டச்சுப்போர் வீரர்களுடனும், மற்றொரு பிரிவினர் வடக்கே காயங்குளம் மன்னரிடமும் போரிட்டு கொண்டிருந்த சமயம் பார்த்து ஆர்க்காடு நவாப்பான சந்தாசாகிப் அவரது சுகோதரர் போடாசாகிப் மற்றும் படைத்தளபதி சப்தர் அலிகான் ஆகியோர் நாஞ்சில் நாட்டை நோக்கி படையெடுத்து வந்தனர். ஆரல்வாய்மொழி கோட்டையை கடந்து அஞ்சுகிராமம் வழியாக வரும்போது அவர்கள் அறுவடைக்காக காத்து நின்ற நெற்பயிர்களையும், தானியங்களையும் சூறையாடி ஈத்தங்காடு என்னுமிடத்தில் வந்த போது அன்றைய வட்டப்பள்ளி ஸ்தானிகர் தலைமையில் ஊர் பொதுமக்கள் சேர்ந்து கடும் சண்டை நடத்தினர். இதில் வட்டப்பள்ளி ஸ்தானிகர் உட்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். வெற்றி பெற்ற நவாப் தனது படையோடு பழையாற்றை கடந்து சுசீந்திரத்தை வந்தடைந்தனர். மார்கழி திருவிழா முடிந்து மிக கம்பீரமாக நின்று கொண்டிருந்த அன்றைய சுவாமி தேரை தீயிட்டு கொளுத்தினர். கோயிலின் உட்பகுதியை சேதப்படுத்தினர். ஈத்தங்காட்டில் போர் நடந்து வந்த வேளையில் உள்ளூர் பொதுமக்கள் கோயில் சம்பந்தப்பட்ட பொருட்களை கருவறைக்குள் இட்டு பூட்டி சுவரெழுப்பி பாதுகாத்தனர். அந்த சமயம் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையை காப்பாற்ற மண்ணுக்குள் புதைத்து மறைத்து வைத்தனர். 2 நூற்றாண்டுகளாக யாருமே புதைந்து கிடந்த ஆஞ்சநேயரை எடுத்து நிறுத்தி வைக்க முன்வரவில்லை.

சித்திரை திருநாள் மன்னர் மகாராஜாவாக பொறுப்பேற்றதும் சி.பி.ராமசாமி ஐயர் திவானாக இருந்த சமயம், எம்.கே.மாங்கொம்பு நீலகண்ட ஐயர் தேவஸ்தான கமிஷனராகவும், கேரளவர்மா கண்காணிப்பாளராகவும், பரமேஸ்வர சர்மா வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகராக இருந்த சமயம் ஆஞ்சநேய சுவாமி மண்ணிற்குள் இருந்து எடுக்கப்பட்டு வட கிழக்கு மூலையில் ராமபிரானின் எதிரே 1930மே 2ம்தேதி (1105சித்திரை19) நிறுவப்பட்டார். பிரதிஷ்டை செய்யாவிட்டாலும் கூட அகில உலகம் முழுவதும் ஆஞ்சநேய சுவாமியின் புகழ் பரவியுள்ளது. இன்று ஆஞ்சநேய ஜெயந்தி விழாவையொட்டி அரசு நிர்வாகம் சார்பில், சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து காலை முதல் இரவு வரை ஸ்பெஷல் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்களின் நலன் கருதி குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் 5 தேர்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ விழா ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் கடந்த 13-ம் தேதி ... மேலும்
 
temple news
மேலுார்; கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலூர் செம்பூர் அய்யனார் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar