வேலஞ்சேரி மங்களீஸ்வரர் கோவிலில் 5ம் ஆண்டு தெப்ப உத்வசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2026 04:02
திருத்தணி: திருத்தணி அடுத்த வேலஞ்சேரி கிராமத்தில், பழமை வாய்ந்த சர்வ மங்களீஸ்வர சுவாமி கோவிலில். நேற்று காலை முதல் இரவு 10:00 மணி வரை. மூலவருக்கு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக. கோவில் எதிரே உள்ள மங்களீஸ்வரர் கோவில் குளத்தில், ஐந்தாம் ஆண்டு தெப்பத்திருவிழா நடந்தது. நேற்று உற்சவ பெருமான், மாலை 6:30 மணிக்கு எழுந்தருளினார். பின், கோவில் குளத்தை மூன்று முறை வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை திருக்கல்யாணத்துடன், நடப்பாண்டிற்கான சிவராத்திரி விழா நிறைவு பெற்றது. இதில், திருத்தணி, வேலஞ்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.