Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செத்தவரை சொக்கநாதர் கோவிலில் ... தேர்வில் வெற்றி பெற கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை தேர்வில் வெற்றி பெற கரிவரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

17 பிப்
2026
12:02

அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடந்தது. அச்சிறுபாக்கத்தில் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது.


நேற்று முன்தினம் சிவராத்திரியையொட்டி மூலவரான ஆட்சீஸ்வரருக்கு நான்கு கால பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரி விழா நடந்தது. செங்கல்பட்டு அடுத்த, ஆத்துார் கிராமத்தில், ஸ்ரீ தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ஸ்ரீ முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மஹா சிவராத்திரி விழா, நேற்றுமுன்தினம் சிறப்பு யாகத்துடன் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு, முக்தீஸ்வரருக்கு 21 திரவியம் கொண்ட முதல்கால பூஜை துவங்கி, ஆறு கால பூஜை, நேற்று அதிகாலை 4:00 மணிவரை, நடைபெற்றது. சந்திரசேகர் சுவாமி மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா நடைபெற்றது. காலை 6:00 மணிக்கு, கோ பூஜையுடன் நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை, ஆத்துார் ஸ்ரீ முக்தீஸ்வரர் சேவா டிரஸ்ட் செய்திருந்தனர்.


செய்யூர் அடுத்த முகையூர் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் பழமையான சொர்ணாம்பிகை உடனுறை கனகபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, அமாவாசை பூஜை விஷேசமாக நடக்கும். சிவராத்திரி விழாவை விமரிசையாக நடத்த கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு யாக சாலைகள் அமைத்து மஹா சிவராத்திரிக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து, வேதங்கள் கூறி நான்கு காலமும் யாகசாலையில் பூஜைகள் செய்யப்பட்டு கலச அபிஷேகம் நடத்தப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன. இதே போல் கருங்குழியில் காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர், ரகோத்தம கோவில் வளாகத்தில் உள்ள ஞான லிங்கேஸ்வரர், மதுராந்தகம் திருவெண்காட்டீஸ்வரர், அச்சிறுபாக்கம் வஜ்ரகிரி மலையின் மீது உள்ள மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர், அனந்தமங்கலம் அகத்தீஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் சிவராத்திரி விழா விமரிசையாக நான்கு கால பூஜைகளுடன் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar