கண்டாச்சிபுரம்: ஒதியத்துார் அங்காளம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடந்தது.
கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்துார் அங்காளம்மன் கோவிலில் 139 ஆம் ஆண்டு மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.கடந்த 17 ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று இரவு 9:00 மணிக்கு சக்தி கரகம் ஊர்வலம் நடந்தது.இரவு அங்காளம்மன் மற்றும் பரிவாரதெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனையும் நடந்தது. பின்னர் மயானத்தில் வல்லாளகண்டன் கோட்டையை அழிக்கும் நிகழ்ச்சியும்,அம்மன் குறி சொல்லும் நிகழ்ச்சியும் நடந்தது.தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் நேர்த்திக்கடன் செய்துகொண்ட பக்தர்களின் கபால ஊர்லவலமும் நடந்தது. விழாவில் சுற்றுப் பகுதியைச்சேர்ந்த கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து நேர்த்திகடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தரகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை அங்காளம்மன் கோவில் நிர்வாகிகளும் ஒதியத்துார் பகுதி பொதுமக்களும் செய்திருந்தனர்.