சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் 11 நாட்கள் மாசித் தெப்ப உத்ஸவம் நடைபெறும். நேற்று மாலை சேனை முதல்வர் புறப்பாடு நடந்தது. நாளை காலை 8:16 மணிக்கு பெருமாள் கல்யாண மண்டபம் எழுந்தருள தொடர்ந்து கொடியேற்றம் நடைபெறும். இரவு 8:00 மணிக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். தொடர்ந்து தினசரி காலை சுவாமி புறப்பாடும் இரவு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும் நடைபெறும். பிப்.28 காலை தெப்பக்குளக்கரையில் முகூர்த்தக்கால் நடுதலும், மாலையில் சூர்ணாபிேஷகமும் நடைபெறும். மார்ச் 2 காலை 11:00 மணி அளவில் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் பெருமாள் தெப்ப குளம் எழுந்தருளி மதியம் 12:16 மணியளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெறும். மார்ச் 3 காலை 10:42 மணிக்கு தங்கப்பல்லக்கில் பெருமாள் தெப்பக்குளம் எழுந்தருளி பகல் தெப்பம் நடைபெறும். தொடர்ந்து, சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 1:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கோயில் நடை சார்த்தப்படும். வழக்கம் போல் பக்தர்கள் இந்த நேரத்தில் கோயிலில் சாமி தரிசனம் செய்ய முடியாது. இரவு 10:00 மணிக்கு தெப்பம் மும்முறை வலம் வரும். மார்ச் 4 காலையில் தீர்த்தவாரியும், இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி மூலஸ்தானம் எழுந்தருளலுடன் உத்ஸவம் நிறைவடையும்.