சின்னாளபட்டியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23பிப் 2026 01:02
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், மூலிகை வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தன.
கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சுவாமி தரிசனம் செய்தார்.
கோயில் நிர்வாகம் சார்பில், பூரண கும்ப வரவேற்பு, பரிவட்டத்துடன் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. விழாவில் ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம், பொங்கல் வழிபாடு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.