இடிகரை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
பதிவு செய்த நாள்
24
பிப் 2026 12:02
பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடிகரை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. கோமாதா பூஜை, மங்கள இசை, தீர்த்த குடங்கள் திருவீதி உலா, திருவிளக்கு வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, ஐம்பூத வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு, எண் திசை காவலர் வழிபாடு, புற்று மண் எடுத்து வருதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, திருமஞ்சனம், அடியார்கள் வழிபாடு, 108 வகையான காய்கனி, கிழங்கு உட்பட மூலிகை பொருட்கள் பூஜை, பேரொளி வழிபாடு, மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல், ராகம், தாளம் வாசித்தல், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நேற்று முன்தினம் காலை திருப்பள்ளி எழுச்சி, திருமுறை இசைத்தல், திருக்குடங்கள் கோவிலை சுற்றி வலம் வருதல், விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம், மூலமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் ஆகியவை நடத்தப்பட்டன. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.
|