நடுக்காவுடையார் தர்மசாஸ்தா கோயிலில் 18ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜன 2013 10:01
திருநெல்வேலி: பாளை., நடுக்காவுடையார் தர்ம சாஸ்தா கோயிலில் 18ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. பாளை., சாந்திநகர் 10வது குறுக்குத்தெருவில் பூர்ணாம்பாள், புஷ்கலாம்பாள் சமேத நடுக்காவுடையார் தர்ம சாஸ்தா கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா பூஜைகள் துவங்கியுள்ளது. நாளை (15ம் தேதி) முதல் 6 கால யாகசாலை பூஜைகள் மற்றும் வேத பாராயணம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை சகடபுரம் வித்யா பீடம் பதரி சங்கராச்சார்யர் வித்யா அபிநவ கிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகள் நடத்திவைக்கிறார். இதற்காக சுவாமிகள் கோயிலுக்கு விஜயம் செய்துள்ளார். தினந்தோறும் ஸ்ரீமடம் சார்பில் தினமும் காலை 8 மணிக்கு சந்திரமவுலீஸ்வரர் பூஜை, தரிசனம், தீபாராதனை, பிட்சாவந்தனம், தீர்த்த பிரசாதம் வழங்குதல், மதியம் பக்தர்களின் வீடுகளில் பாத பூஜை, மாலை 6.30 மணிக்கு சந்திரமவுலீஸ்வரர் பூஜை நடக்கிறது. கும்பாபிஷேக விழா 18ம் தேதி பகல் 12.05 மணிக்கு மேல் 12.25 மணிக்குள் மேஷ லக்னத்தில் நடக்கிறது. ஏற்பாடுகளை நடுக்காவுடையார் தர்மசாஸ்தா தேவஸ்தானம் பரம்பரை சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.