பங்குனி உத்திர திருவிழா : சுப்ரமணிய சுவாமிக்கு புஷ்பாஞ்சலி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2026 02:04
போடி; போடி சுப்ரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு புஷ்பாஞ்சலி சிறப்பு பூஜை நடந்தது.
போடி சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு புஷ்பாஞ்சலி பூஜை கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகளுடன் புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் தரிசனம் பெற்றனர்.