Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோசாலைகளில் மாட்டுப்பொங்கல் ... நொய்யல் நதிக்கரையில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆல்கொண்டமால் கோவிலில் பொங்கல் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2013
10:01

உடுமலை: விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்கு துணையாக உள்ள கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, உடுமலை ஆல்கொண்டமால் கோவிலில், இன்று திருவிழா கொண்டாடப்படுகிறது. உடுமலை செஞ்சேரிமலை ரோட்டில் உள்ளது சோமவாரப்பட்டி ஊராட்சி. இங்கு முட்புதர்களால் சூழப்பட்ட கொடிய பாம்புகள் வாழும் ஆலமரத்தின் கீழ், லிங்க வடிவில், புற்று உருவானது. அந்த காட்டுப்பகுதியில் மேயும் மாடுகள், லிங்க வடிவில் உருவான புற்றுக்கு பாலை சொரிந்து அபிஷேகம் செய்துள்ளன. தொடர்ந்து பசுக்கள் பால் சொரிவதை கண்ட முன்னோர்கள், ஆயர்பாடி கண்ணனின் மகிமை என்று உணர்ந்தனர். இக்கோவிலின் அருகே ஆலமரங்கள் நிறைந்த ஆலாமரத்தூர் என்னும் ஊர் உள்ளது. ஆலம் உண்ட சிவபெருமானை குறிக்கும் லிங்க வடிவ புற்றில், கண்ணன் குடி கொண்டதால் அங்குள்ள திருமாலை "ஆல்கொண்டமால் என்று மக்கள் வணங்க ஆரம்பித்தனர். சிவனும், திருமாலும் ஒருங்கே அமையப்பெற்ற ஆல்கொண்டமாலுக்கு விவசாயிகள் பால், வெண் ணை ஆகியவற்றால், அபிஷேகம் செய்து வழிபட துவங்கினர். ஆண்டு முழுவதும் உடனிருந்து உதவி செய்யும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்துவதையும், உண்மையான உயர்வுக்கு துணை புரியும் உயிர்களை வழிபடுவதையும், இந்த கோவில் வழிபாட்டு முறை காட்டுகிறது. பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியுள்ள ஆல்கொண்டமால் கோவிவிலில், பொங்கல் விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையுடன், பூஜைகள் துவங்கின. பகல் 11:00 மணிக்கு சிறப்பு பூஜையும், மாலை 6:00 மணிக்கு உழவர் திருநாள் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இவை இன்றும் தொடரவுள்ளன. அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, பகல் 11:00 மணிக்கு சிறப்பு பூஜையும் நடைபெறவுள்ளது. திருவிழாவையொட்டி, உடுமலை பகுதி கிராம மக்கள், பாரம்பரிய நடனங்களை ஆடியும், வழிபாடுகள் நடத்தியும் வருகின்றனர். ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று, பக்தர்கள் மாட்டு வண்டிகளிலும், வாகனங்களிலும் வந்து இறைவனை தரிசித்து செல்வது வழக்கம். ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவையொட்டி, உடுமலை கிளை போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சுவாமி விவேகானந்தரின் 112வது மகா சமாதி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள ... மேலும்
 
temple news
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் கணபதி நகரில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar