Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேவுகபெருமாள் கோவிலில் காளைகளுக்கு ... சபரிமலையில் நாளை! சபரிமலையில் நாளை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகோவிலில் மகர சங்கராந்தி பெருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2013
11:01

தஞ்சாவூர்: பெரியகோவிலிலுள்ள நந்தியம்பெருமானுக்கு மகர சங்கராந்தி பெருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தஞ்சையை ஆண்ட சோழமன்னன் ராஜராஜன் கட்டிய பெரியகோவில், இன்றைக்கும் வெளிநாட்டினர், வெளிமாநிலத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. பெரியகோவில், பெரியநந்தி, மூலவரான பிரகதீஸ்வரர் பெரிய சிவலிங்கம் கோலம் என, பிரமாண்டமாய் காட்சியளிப்பது கூடுதல் சிறப்பாகும். கோவில் நுழைவாயில்களை தாண்டி, நுழைந்தவுடன் முகப்பில் பக்தர்களுக்கு பிரமாண்டமாக நந்தியம்பெருமான் காட்சியளிக்கிறார்.
பெரியகோவிலில் ஆண்டுதோறும் ராஜராஜன் பிறந்தநாளில் சதயவிழா நடத்தப்படுவது போலவே, நந்தியம்பெருமானுக்கு குறித்த தினத்தில், மகர சங்கராந்தி பெருவிழாவும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, நடப்பாண்டு மகர சங்கராந்தி பெருவிழா நேற்று நடந்தது. இதில், நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, நந்தியம்பெருமானை, பக்தி பெருக்குடன் வணங்கி, வழிபட்டனர். இதனால் பெரியகோவில் நேற்று பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியது. இதைத்தொடர்ந்து, மாட்டுப்பொங்கல் தினமான இன்று நந்திகேஸ்வரருக்கு பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் இனிப்பு வகைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, சோடச உபசாரத்துடன் மஹா தீபாராதனையும் நடக்கிறது. பின்னர், 108 பசு மாடுகளுக்கு கோ பூஜையை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்கின்றனர். ஏற்பாட்டை தஞ்சை இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஞானசேகரன் தலைமையில், கோவில் செயல் அலுவலர் அரவிந்தன், கண்காணிப்பாளர்கள் அசோகன், குணசேகரன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar