அன்னூர்: அருகம்பாளையம், பால பட்டாபிராமர் கோவிலில் 12ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
அருகம்பாளையத்தில், பழமையான பால பட்டாபிராமர் கோவிலில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா நேற்று கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலையில் அஷ்டதிக்கு பாலகர்களுக்கு பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை (11ம் தேதி) மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில் இருந்து முளைப்பாரி, விமான கலசங்கள் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது. மாலையில் விமான கலசங்களை கோபுரத்தில் பிரதிஷ்டை செய்கின்றனர். இரவு வேள்வி பூஜை நடக்கிறது. 12ம் தேதி காலை 9:30 மணிக்கு, விமான கலசம், ஸ்ரீ பால பட்டாபிராமர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு பரதநாட்டியம் நடக்கிறது. 13ம் தேதி காலை 7:00 மணிக்கு தாசர்கள் பந்த சேவை மற்றும் கபால பூஜை நடைபெறுகிறது. காலை 9:00 மணிக்கு பாலபட்டாபிராமருக்கும், பெருந்தேவிக்கும், திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. மாலை 3:00 மணிக்கு 3,008 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. மாலை 5:00 மணிக்கு அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனையும், இரவு 7:00 மணிக்கு கும்பகோணம் விட்டல்தாஸ் மகராஜ் ராம நாம சங்கீர்த்தன பஜனை நடைபெறுகிறது.