Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீரணிப்பட்டியில் முத்துமாரியம்மன் ... முக்கனிகளோடு புத்தாண்டை வரவேற்க தயாரான மக்கள் முக்கனிகளோடு புத்தாண்டை வரவேற்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிராமங்களில் அய்யனாருக்கு தயாராகும் புரவிகள்
எழுத்தின் அளவு:
கிராமங்களில் அய்யனாருக்கு தயாராகும் புரவிகள்

பதிவு செய்த நாள்

13 ஏப்
2026
05:04

பழையனூர்: பழையனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் புரட்டாசி மாதம் நடக்க உள்ள புரவி எடுப்பு திருவிழாக்களுக்காக புரவிகள் தயாரிப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன தமிழகத்தில் புரட்டாசி மாதத்தில் மழை வேண்டி கிராமப்புறங்களில் புரவி எடுப்பு திருவிழாக்கள் நடத்தப்படும்.


ஊரை காவல் காக்கும் அய்யனாருக்கு புரவி எடுப்பு திருவிழா நடத்தினால் மனம் குளிர்ந்து மழை பெய்ய வைப்பார் என்பது நம்பிக்கை. புரவி எடுப்பு திருவிழாவிற்காக மண்ணால் செய்யப்பட்டபுரவிகள் தயாரிப்பது வழக்கம், திருமணம், குழந்தைப்பேறு, உடல் நல பாதிப்பு ஆகியவிற்றிற்காக நேர்த்தி கடன் செலுத்த கிராமப்புற மக்கள் அய்யனாருக்கு புரவிகள், நாகம், காளை உள்ளிட்ட மண் பொம்மைகளை செலுத்துவது வழக்கம், இதற்காக பழையனூர் அருகே உள்ள அழகுடையான் கிராமத்தில் புரவிகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மூன்றரை அடி முதல் ஐந்தரை அடி உயரம் வரை புரவிகள் தயாரிக்கின்றனர். புரவிகளை மொத்தம் ஐந்து பாகங்களாக தனித்தனியே தயாரித்து அவற்றை இணைக்கின்றனர். பின் சூளையில் வைத்து சுடப்பட்ட பின் வர்ணம் தீட்டி அழகுபடுத்துகின்றனர். அழகுடையான் கிராமத்தில் பட்டனேந்தல், சங்கங்குளம், வீரனேந்தல், ஆனைக்குளம் உள்ளிட்ட கிராமப்புற அய்யனார்களுக்கு புரவிகள் தயாரிக்கப்படுகின்றன.


புரவி தயாரிப்பாளர் விஜயகுமார் கூறுகையில், சீசன் சமயத்தில் 100 புரவிகள் வரை தயாரிப்போம், புரட்டாசி மாதத்தில் அனைத்து கிராமங்களிலும் திருவிழா நடக்க உள்ளதால் முன்கூட்டியே புரவிகளை தயாரித்து வருகிறோம். புரவிகள், காளைகள் உள்ளிட்டவற்றை செய்வதுடன் அவற்றிற்கு கழுத்துப்பகுதியில் செய்யப்படும் அலங்காரங்கள் தான் நீண்ட நேரம் பிடிக்கும், மணிகள், கயிறுகள், மூக்குப்பட்டைகள் என தனித்தனியே செய்து இணைக்க வேண்டும், வர்ணம் தீட்டும் போதும் ஒவ்வொரு அலங்காரத்திற்கும் தனித்தனி வர்ணம் தீட்ட வேண்டும், சீசன் சமயத்தில் புரவிகள் அதிகளவில் தயாரிப்போம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar