பதிவு செய்த நாள்
22
ஏப்
2026
03:04
வாரணாசி: காசியில் அனுமான் ஹாட் பகுதியில் உள்ள காஞ்சி காமகோடி பீடத்தில் ஆதி சங்கரர் பிறந்த தினமான நேற்று, நாடு நலம்பெற வேண்டி, வேத பாராயணங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடை பெற்றது.
பாரதம் பல்வேறு மத நம்பிக்கைகளாலும் ஒற்றுமையற்ற தன்மையாகவும் பிரிந்து இருந்த நிலையில், சுமார் 25, 35 ஆண்டுகளுக்கு முன்பு காலடியில் சிவகுரு மற்றும் ஆரியாம்பா என்னும் தம்பதியினருக்கு ஆதிசங்கர பகவத் பாதர் அவதரித்து, வேதத்தின் பொருள்கள் பிரம்ம சூத்திரங்களின் ஆசியங்களை விரிவுரையாக எழுதியதுடன், சாமானிய மக்கள் தனது வாழ்க்கையில் நலம் பெற மக்களுக்கு பிள்ளையார், முருகன், சிவன், விஷ்ணு, சக்தி, சூரியன் என்று 6 வகை வழிபாடுகளை கடைபிடிக்க வழிவகை செய்து கொடுத்தார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, அருணாச்சல பிரதேசம் முதல் அகமதாபாத் வரை பரந்து விரிந்து இருக்கும் பாரதத்தில் நான்கு திக்குகளிலும், நான்கு மடங்களை நிறுவியதுடன், கிளைகளாக 51 சக்தி பீடங்களையும் நிறுவி தானே காஞ்சிபுரம் தலைவராக அமர்ந்து, பாரத தேசத்தை சிறந்த தேசமாக விளங்க வழி வகுத்தார். அவரின் பிறந்த தினமான நேற்று, சனாதன மத நம்பிக்கை கொண்டவர்களின் தலைமையிடமாக கருதப்படும் காசியில் அனுமான் ஹாட் பகுதியில் பகுதி இருக்கும் காஞ்சி காமகோடி பீடத்தில், மடப்பொறுப்பாளர் ஸ்ரீ சுப்பிரமணியன் தலைமையில், நாடு நலம் பெறவும், மக்கள் அனைவரும் மகிழ்வுடன் விரோத மானப்பான்மை இல்லாமல் ஆனந்தமாக வாழ வேத பாராயணங்களும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது.