Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச ... அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து பழிவாங்குமா? அடிபட்ட பாம்பு மீண்டும் வந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடம்பூர் மாரியம்மன் கோயில் திருக்குடமுழுக்கு திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2013
11:01

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கடம்பூர் ஸ்ரீமாரியம்மன் கோயில் திருக்குட முழுக்கு திருவிழா யாகசாலை பூஜைகள் நடந்தது. கோவில்பட்டி அருகே கடம்பூர் இந்து நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அம்பிகை ஸ்ரீமாரியம்மன் கோயிலில் நாளை திருக்குட முழுக்கு பெருவிழா நடக்கிறது. இதில் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள நூதன தங்கக்கொடி மரம் மற்றும் ராஜகோபுரம், அனைத்து விமானங்கள், பரிவார தேவதைகளுக்கும் திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து நேற்று காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், ராஜகோபுர தங்கக்கலசம் திருவீதி உலாவும் நடந்தது. மேலும் நண்பகலில் பூர்ணாகுதி தீபாராதனையும், மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜையும், இரவில் பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. முன்னதாக மாலையில் கோயில் கலசங்கள் அனைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்தாபனம் செய்யப்பட்டது. மேலும் மாலையில் யாகசாலை பூஜை பொருட்களை மேளதாளங்கள், பேண்ட் வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நாராயணசாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து யாகசாலை மண்டபத்திற்கு எடுத்து வந்தனர். இதையடுத்து யாகசாலை பூஜைகள் செய்வோர் உள்பட குடமுழுக்கு திருவிழா பணிகளுக்கு வந்த அனைவருக்கும் வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருப்பணிக்குழு தலைவர் சவுந்திரபாண்டியன், செயலாளர் தங்கப்பநாடார், பொருளாளர் சக்கரவர்த்தி, துணை பொருளாளர் அருணாசலம், அறங்காவலர் குழு தலைவர் ஜனார்த்தனன், துணை தலைவர்கள் முத்துக்கனிநாடார், ஜெயராஜ்நாடார், வேல்சாமிநாடார், ராஜசேகர், சந்திரன், துணை செயலாளர்கள் முத்துமாலை, சுரேந்திரன், ராம்குமார், கமிட்டி உறுப்பினர்கள் ஜெயராமன், காளிராஜன், மாடசாமி, கண்ணன், பாஸ்கரன், முருகேசன், மாரியப்பன், சேகர், சந்திரசேகரன், நாராயணன், மகாராஜன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று நான்கு மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும், பூர்ணாகுதி தீபாராதனைகளும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar