சோழவந்தான் : ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி அமாவாசைக்கு அடுத்த திங்கள் அன்று கொடியேற்றம் நடந்து 17 நாட்கள் திருவிழா நடக்கும். இந்த ஆண்டு கடந்த மே 18 கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.