Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அருணாப்பேரி அம்மன் கோயில் திருவிழா ... பழநியில் இன்று.. தைப்பூசம் 3ம் நாள்! பழநியில் இன்று.. தைப்பூசம் 3ம் நாள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை பாத யாத்திரை பக்தர்கள் இறந்தால் ரூ.1 லட்சம் நிதி உதவி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2013
11:01

நகரி: பாத யாத்திரையாக திருமலைக்கு வரும் போது, உடல்நிலை பாதிக்கப்பட்டோ அல்லது இயற்கையாகவோ மரணம் அடையும் பக்தரின் குடும்பத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும். அத்துடன், பாத யாத்திரை பக்தர்களுக்கு வழங்கப்படும், "திவ்ய தரிசன டோக்கன்களுக்கான கட்டுப்பாடும் நீக்கப்படும் என, திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. திருப்பதி, திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம், சேர்மன் பாபிராஜூ தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி, அவர் கூறியதாவது: திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, சுவாமி தரிசனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும். பாத யாத்திரை பக்தர்களுக்கு, "திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவதில், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளன. பாத யாத்திரை பக்தர்கள் அனைவருக்கும், இனி நிபந்தனையின்றி டோக்கன் வழங்கப்படும்.திருப்பதியில் இருந்து அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு வழியாக, பாத யாத்திரையாக திருமலைக்கு வரும்போது, பக்தரில் யாராவது உடல்நிலை பாதிக்கப்பட்டோ அல்லது இயற்கையாகவோ மரணம் அடைந்தால், அவரின் குடும்பத்தினருக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். இத்தொகை, காப்பீட்டு திட்டத்தின் மூலம், பக்தரின் குடும்பத்திற்கு வழங்கப்படும்.மகா கும்பமேளாவை ஒட்டி, அலகாபாத்தில் திறக்கப்பட உள்ள வெங்கடேச பெருமாளின் மாதிரி கோவிலை, வரும், 27ம் தேதி முதல் மார்ச், 10ம் தேதி வரை நீட்டித்து, நித்ய பூஜைகள் செய்யப்படும். அங்கு, பக்தர்களின் உணவு வசதிக்காக, இலவச அன்ன பிரசாதம் வழங்கும் மையம் ஏற்படுத்தப்படும். வருமானம் அதிகமாக கிடைக்கும் முக்கிய நகரங்களில் தேவஸ்தானம் சார்பில், புதிதாக திருமண மண்டபங்கள் கட்டப்படும். இவ்வாறு, சேர்மன் பாபிராஜூ தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது ... மேலும்
 
temple news
மாலை நேர பொங்கல்: பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப் பொங்கலை முன்னிட்டு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar