பதிவு செய்த நாள்
25
ஜூன்
2026
09:06
முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் அருகே விக்கிரமபாண்டியபுரம் கிராமத்தில் ராஜராஜேஸ்வரி அம்மன்,அக்னி வீரபத்திரர்,மகாகணபதி கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது.இதனை முன்னிட்டு மங்கலஇசை, வேதபாராயணம்,விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமம்,மகாலட்சுமி பூஜை முதல்கால,இரண்டாம்கால யாக பூஜை, பூர்ணாஹீதி தீபாரதனை நடந்தது.நேற்று மூன்றாம்,நான்காம் கால யாகபூஜை,நாடி சந்தனம்,மஹா பூர்ணாஹீதி தீபாரதனை நடந்தது.சிவாச்சாரியார்கள் தலைமையில் விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. ராஜராஜேஸ்வரி அம்மன் உட்பட பரிவார தெய்வங்களான அக்னி வீரபத்திரர், மகாகணபதிக்கு பால்,சந்தனம்,மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாரதனை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் சென்னை, மதுரை, முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பலரும் கலந்து கொண்டனர்.