பரமக்குடி தர்மசாஸ்தா கோயிலில் நிறை புத்தரிசி தரிசனம்; நெற்கதிர்களால் அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2026 04:08
பரமக்குடி: பரமக்குடி தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி வைபவம் நடந்தது.
பரமக்குடி தரைப்பாலம் அருகில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் கேரளா ஆரியங்காவு கோயிலில் நடப்பதை போன்று புஷ்கலா தேவி திருக்கல்யாணம் நடக்கிறது. இந்த ஆண்டு முதன் முறையாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடக்கும் நிறை புத்தரிசி தரிசனம் கொண்டாடப்பட்டது. இதன்படி நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு நெற்கதிர்களை சுமந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோயிலை அடைந்து இரவு 7:00 மணி தொடங்கி மூலவர், உற்சவருக்கு கதிர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்து லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்யப்பட்டது. பின்னர் இரவு 8:30 மணிக்கு சரண கோஷம் முழங்க மகாதீப ஆராதனைகள் நடந்தன. அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தர்மசாஸ்தா சேவா சங்க நிர்வாகிகள் செய்தனர்.