Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முதுநிலை கோவில்களில் 2,000 காலி ... பழநி கோவில் தைப்பூச வருவாய் ரூ.5 கோடி! பழநி கோவில் தைப்பூச வருவாய் ரூ.5 கோடி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பமேளாவில் முதியோர் குளிக்க சிறப்பு ஏற்பாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 பிப்
2013
10:02

அலகாபாத்: மகா கும்பமேளா, புனித நீராடலுக்காக, கங்கை நதிக்கரையில், லட்சக்கணக்கான சாதுக்கள் குவிந்துள்ள நிலையில், அலகாபாத் நகரில் வசிக்கும் முதியோருக்கும், புனித நீராட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் முயற்சியில், கும்பமேளா நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். உத்தர பிரதேசம் அலகாபாத் நகரில், கங்கை நதிக்கரையில், மகா கும்பமேளா நடந்து வருகிறது. இதில் பங்கேற்று, கங்கை நதியில் புனித நீராட, நாடு முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான சாதுக்களும், சாதாரண பக்தர்களும், அங்கு குவிந்துள்ளனர். இவர்களுக்கு தேவையான தங்குமிடம், போக்குவரத்து வசதிகளை, கும்பமேளா கமிட்டி செய்து வருகிறது. அதே நேரத்தில், அலகாபாத் நகரில் வசிக்கும் மக்களும், கும்பமேளாவில் பங்கேற்கின்றனர். அவர்களில், வயதானவர்களால், கூட்ட நெரிசலில், நதியில் நீராட முடியாத நிலை ஏற்படுகிறது. அத்தகையவர்களின் சிரமத்தை போக்குவதற்காக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அலகாபாத் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள், மகா கும்பமேளா கமிட்டிக்கு, தகவல் தெரிவித்தால் போதும், ஊர் காவல் படை வீரர்கள், முதியோர் வசிக்கும் இடத்திற்கு சென்று, அவர்களை வாகனங்களில் ஏற்றி, நீராட வைத்து, மீண்டும் அவர்களின் வீடுகளில் கொண்டு விடுகின்றனர். ""இதற்காக கட்டணம் எதையும் வாங்குவதில்லை. எனினும், கூட்ட நெரிசல் அதிகம் உள்ள அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில், இத்தகைய வசதியை முதியோருக்கு அளிக்க முடியாது, என, ஊர் காவல் படை ஏ.டி.ஜி.பி., பிரமோத் குமார் திவாரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ""மாநிலத்தில், 1.18 லட்சம் ஊர் காவல் படை வீரர்கள் உள்ளனர். அவர்களில், 4,500 வீரர்கள், கும்பமேளாவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயில் உட்பட திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் ஐப்பசி மாத கார்த்திகையை ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: ஐப்பசி மாத கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar