பாலசமுத்திரம்; பழநி, பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ திருவிழா (ஆக.23ல்) நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது.பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம், அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் (ஆக.23) நேற்று காலை கோயில் வெளிப் பிரகாரத்தில் கொடிமரம் முன்பு ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ அகோபில வரதராஜ பெருமாள் துணை என எழுதப்பட்டு, சங்கு, சக்கரம், திருநாமம், கருடாழ்வார், தாம்பூலம், சடாரி, தூபம் ஆகியவை வரையப்பட்ட மஞ்சள் நிற கொடி வைக்கப்பட்டது. கொடிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்த பின்பு காலை 8:30 மணியளவில் கோயில் முன்பு உள்ள கொடிமரத்தில் ஆவணி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்று விழா துவங்கியது. இணை கமிஷ்னர் வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அழகர்சாமி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆக.29., மாலை 5:00 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற உள்ளது. ஆக.30., இரவு பாரிவேட்டை நடைபெறும். ஆக.31.,காலை 7:15 மணிக்கு மேல் திருத்தேர் வடம்பிடித்தல் நடந்து தேரோட்டம் நடைபெறும். பிரம்மோற்சவ திருவிழா நாட்களில் பவளக்கால் சப்பரம்,அனுமார் வாகனம், கருட வாகனம், தோளூக்கினியான், சேஷ வாகனம் ஆகியவற்றில் சுவாமி புறப்பாடு நடைபெறும். செப்.2., விடையாற்றி உற்ஸவத்திற்கு பிறகு திருவிழா நிறைவடையும்.