பேரூர்: மருதமலைகோவில் உண்டியல் காணிக்கையாக ரூ. 32 லட்சம் கிடைத்துள்ளது. கோவை அருகே உள்ள மருதமலை சுப்ரமணியசாமி கோவில் உண்டியல், நேற்று முன் தினம் திறக்கப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை உதவிஆணையர்/நகைகள் சரிபார்ப்பு அதிகாரி நடராஜன், கோவில் துணைஆணையர் குமரதுரை, ஆய்வர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. மொத்தமுள்ள 16 உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணியதில், 13 பொது உண்டியல்களில் 29 லட்சத்து 13 ஆயிரத்து 794 ரூபாய் வசூலாகியிருந்தது. கோசாலை உண்டியலில் 84 ஆயிரத்து 461 ரூபாயும், திருப்பணி உண்டியலில் 94 ஆயிரத்து 728 ரூபாயும், அன்னதான உண்டியலில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 428 ரூபாய் உள்பட, மொத்தம், 32 லட்சத்து 12 ஆயிரத்து 411 ரூபாய் வசூலாகியிருந்தது. மேலும், 39 கிராம் தங்கமும், ஒரு கிலோ வெள்ளியும், வெளிநாட்டு டாலர் பணமும் இருந்தன.