பதிவு செய்த நாள்
05
பிப்
2013
11:02
செஞ்சி: இஞ்சிமேடு லட்சுமி நரசிம்மருக்கு ஸ்வாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் இஞ்சிமேடு பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்வாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு கோபூஜையும், வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், கல்யாண லட்சுமி நரசிம்மர், ராமர், சீதா, லட்சுமணர், கருடாஷ்வார், கல்யாண வரத அனுமன் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். காலை 9 மணிக்கு வரதராஜர், பூதேவி, பெருந்தேவி தாயாருக்கு யாகசாலையில் சிறப்பு அலங்காரம் செய்தனர். தொடர்ந்து இஞ்சிமேடு பாலாஜி பட்டாச்சாரியார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு ஹோமம் நடத்தினர். இதில் உலக அமைதிக்காகவும், மக்கள் நோயின்றி வாழவும் நரசிம்ம, கருட, மகாலட்சுமி, தன்வந்திரி பூஜையும் ஒரு லட்சம் மந்திரங்களும் படிக்கப்பட்டன. ஹோமத்தில் வைக்கப்பட்ட கலச நீர் கொண்டு கல்யாண லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.