Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவிகளை சந்தோஷப்படுத்த ஒரு ... திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்! திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிர்வாக சீர்கேட்டில் சிக்கி தவிக்கும் வைத்தியநாத சுவாமி கோயில்(செவ்வாய் ஸ்தலம்)!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 பிப்
2013
04:02

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள, வைத்தியநாத சுவாமி கோவில், நிர்வாக சீர்கேட்டால், சிக்கித் தவிக்கிறது. நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில், தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான, இக்கோவிலுக்கு, நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இக்கோவில் தருமபுரம் ஆதீனம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் நேரடி பார்வையில், கோவில் சுத்தமாகவும், தினமும் பூஜைகளும் முறைப்படி நடந்தது. தற்போது, நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. கோவிலில், 110 பேர் பணியாற்றுகின்றனர்.குருக்கள்கள், பணியாளர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன், தனித்தனியே சங்கங்கள் தொடங்கி சம்பள உயர்வு கோரி போராடி வருகின்றனர். இதனால், கோவிலில் தனக்கு உரிய மரியாதை கிடைக்காததால், தருமபுரம் ஆதீனகர்த்தர், கோவிலுக்கு வருவதை தவிர்த்து வருகிறார். இதனால், பணியாளர்கள், பெயரளவிற்கு பணியாற்றுகின்றனர். கோவிலில் நடக்கும் திருமணம், காது குத்து நிகழ்ச்சிகளின் போது, போடப்படும் குப்பை முழுமையாக அகற்றப்படாமல், குவிந்து கிடக்கிறது.கோவில் மண்டபங்களில் வெற்றிலை, பாக்கு, பான்பராக் எச்சில் துப்பப்பட்டிருப்பதை கண்டு, பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.

சுவாமிக்கு, சித்தர்கள் அமிர்தத்தை அபிஷேகம் செய்தபோது, அமிர்தம் குளத்தில் கலந்ததால், சித்தாமிர்த தீர்த்தம் என்றழைக்கப்படும் குளம், தற்போது பாசி நிறைந்து, பக்தர்கள் நீராட முடியாத நிலையில் உள்ளது.கோவிலுக்கு வரும் சிலரை, தங்களது வாடிக்கையாளர்களாக பாவிக்கும் குருக்கள், அவர்களை சன்னதியின் முன் நிறுத்துவதால், மற்ற பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மன உளைச்சலுடன் செல்கின்றனர்.

இது குறித்து, பக்தர் ஒருவர் கூறியதாவது:தருமபுரம் ஆதீனகர்த்தர் கோவிலுக்கு வராததால், நிர்வாகம் சீர்கெட்டு கிடக்கிறது. குப்பைகளும், எச்சிலுமாய் காணப்படுகிறது. பக்தர்கள் மன நிறைவுடன் சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை. இதைபோக்க, கோவில் நிர்வாகத்தை, தருமபுரம் ஆதீனம் தனது முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.இல்லை என்றால், இந்து சமய அறநிலையத் துறை, கோவில் நிர்வாகத்தை ஏற்று நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: தேய்பிறை சஷ்டியொட்டி, முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
காட்டுமன்னார்கோவில்;  ஆதனூர் சௌந்தரநாயகி அம்பா சமேத சிவலோகநாத சுவாமி திருக்கோயில் மகா ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவம் வெகு விமர்சியாக ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தினர் ஆய்வுகள் நடத்தினர். அதில், கபாலீஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar