Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹஜ் செல்ல விண்ணப்பிக்க 20ம் தேதி ... சபரிமலை நடை திறப்பு! சபரிமலை நடை திறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவானைக்கோயிலில் தேரோட்டம் 4 தேர்கள் ஓடும்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 மார்
2013
11:03

திருச்சி: திருவானைக்கோவில் பங்குனித்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடக்கிறது.பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படும், திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வர் - அகிலாண்டேஸ்வரி கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி மாதம் நடக்கும் தேரோட்டத் திருவிழா பிரசித்திப் பெற்றது. நடப்பாண்டு, பங்குனி தேரோட்டத் திருவிழா, "எட்டுதிக்கு (எட்டு திசை) கொடியேற்றத்துடன். கடந்த, 9ம் தேதி துவங்கியது. அன்று முதல் தொடர்ந்து, மாலையில், சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதம், காமதேனு, கைலாசம், கிளி, வெள்ளி ரிஷப வாகனங்களில் ஸ்வாமியும், அம்மனும் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
*நான்கு தேர்: நேற்றிரவு, வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்வாமியும், அம்மனும் எழுந்தருளி, சகடை எனப்படும் தெருவடைச்சானில், 4ம் பிரகார வீதியுலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான, பங்குனித்தேர், இன்று காலை, 8 மணிக்கு வடம் பிடிக்கப்படுகிறது.
திருவானைக்கோவிலை பொறுத்தவரை, விநாயகர், முருகனுக்கு தனித்தனியாக சிறிய தேர்கள் உள்ளன. காலை, 6 மணியளவில், இரண்டு தேர்களும் வடம் பிடிக்கப்படும். தேரில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளி, 4ம் பிரகார வீதியுலா வருகிறார். ஸ்வாமியும், அம்மனுக்கும் தனித்தனியாக பெரிய தேர்கள் உள்ளன. முதலில் சிவன் தேர் வடம் பிடிக்கப்பட்டு வலம் வந்த பின்னர், அம்மன் தேர் வடம் பிடிக்கப்படும். தேர் விழாவையொட்டி, அப்பகுதிகளில், தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, நீர்மோர், பானகங்களும், அன்னதானமும் வழங்கப்படுகிறது.வரும், 18ம் தேதி மதியம், நடராஜர் புறப்பாடாகி, பிரம்ம தீர்த்தக்குளத்தில் தீர்த்தவாரி கண்டருள்கிறார். 21ம் தேதி மாலை, பல்லக்கில் எழுந்தருளி, 4ம் பிரகார வீதியுலாவுடன் பங்குனித்தேரோட்ட திருவிழா முடிகிறது. ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் தங்கமுத்து மற்றும் பணியாளர்கள் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar