Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹஜ் செல்ல விண்ணப்பிக்க 20ம் தேதி ... சபரிமலை நடை திறப்பு! சபரிமலை நடை திறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவானைக்கோயிலில் தேரோட்டம் 4 தேர்கள் ஓடும்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 மார்
2013
11:03

திருச்சி: திருவானைக்கோவில் பங்குனித்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடக்கிறது.பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக போற்றப்படும், திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வர் - அகிலாண்டேஸ்வரி கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி மாதம் நடக்கும் தேரோட்டத் திருவிழா பிரசித்திப் பெற்றது. நடப்பாண்டு, பங்குனி தேரோட்டத் திருவிழா, "எட்டுதிக்கு (எட்டு திசை) கொடியேற்றத்துடன். கடந்த, 9ம் தேதி துவங்கியது. அன்று முதல் தொடர்ந்து, மாலையில், சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதம், காமதேனு, கைலாசம், கிளி, வெள்ளி ரிஷப வாகனங்களில் ஸ்வாமியும், அம்மனும் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
*நான்கு தேர்: நேற்றிரவு, வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்வாமியும், அம்மனும் எழுந்தருளி, சகடை எனப்படும் தெருவடைச்சானில், 4ம் பிரகார வீதியுலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான, பங்குனித்தேர், இன்று காலை, 8 மணிக்கு வடம் பிடிக்கப்படுகிறது.
திருவானைக்கோவிலை பொறுத்தவரை, விநாயகர், முருகனுக்கு தனித்தனியாக சிறிய தேர்கள் உள்ளன. காலை, 6 மணியளவில், இரண்டு தேர்களும் வடம் பிடிக்கப்படும். தேரில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளி, 4ம் பிரகார வீதியுலா வருகிறார். ஸ்வாமியும், அம்மனுக்கும் தனித்தனியாக பெரிய தேர்கள் உள்ளன. முதலில் சிவன் தேர் வடம் பிடிக்கப்பட்டு வலம் வந்த பின்னர், அம்மன் தேர் வடம் பிடிக்கப்படும். தேர் விழாவையொட்டி, அப்பகுதிகளில், தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, நீர்மோர், பானகங்களும், அன்னதானமும் வழங்கப்படுகிறது.வரும், 18ம் தேதி மதியம், நடராஜர் புறப்பாடாகி, பிரம்ம தீர்த்தக்குளத்தில் தீர்த்தவாரி கண்டருள்கிறார். 21ம் தேதி மாலை, பல்லக்கில் எழுந்தருளி, 4ம் பிரகார வீதியுலாவுடன் பங்குனித்தேரோட்ட திருவிழா முடிகிறது. ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் தங்கமுத்து மற்றும் பணியாளர்கள் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar