Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேலுடையான்பட்டு கோவிலில் பங்குனி ... பூதபுரீஸ்வரர் கோவிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜகோபால ஸ்வாமி கோவிலில் வெண்ணைத்தாழி உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2013
11:03

மன்னார்குடி: வைணவ ஸ்தலங்களில் புகழ்பெற்றதும், தென்திருப்பதி என அழைக்கப்படும் மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோவிலில், பங்குனி பெருவிழாவில் வெண்ணைத்தாழி உற்சவம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோவிலில் பங்குனி பெருவிழாவில்,18 நாட்கள் பிரம்ம உற்சவம், 12 நாட்கள் விடையாற்றி விழா துவங்கியது. பிரம்ம உற்சவத்தில் புன்னை வாகனம், ஹம்ச வாகனம், கண்டபேரண்டபட்ஷி, புஷ்பபல்லக்கு, ரிஷியமுக பர்வதம், சிம்ம வாகனம், தங்க சூர்யபிரபை,வெள்ளிசேஷ வாகனம், தங்க கருடவாகனம், வெள்ளி ஹனுமந்த வாகனம், யானை வாகனம் போன்ற வாகனங்களில், தினந்தோறும் பெருமாள் தோன்றி, வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாளித்தார். பங்குனி பெருவிழாவில் சிறப்புஅம்சமான வெண்ணைத்தாழி விழாவில், ஸ்ரீ வித்ய ராஜகோபாலஸ்வாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வீதியுலா சென்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் தங்களின் எண்ணம் நிறைவேற மனதில் வேண்டிக்கொண்டு, வெண்ணெயை கிருஷ்ணர் கோலத்தில் தோன்றிய ராஜகோபாலன் மீது வீசினர். இதனைத்தொடர்ந்து மதியம், 3 மணிக்கு செட்டி அலங்காரம் நடந்தது. இரவு, ஏழு மணியளவில் கள்ளர் சமூகத்தார் சார்பில் வெட்டுங்குதிரை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தங்கக்குதிரையில் ராஜகோபாலனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, வாணவேடிக்கை முழங்க, வீதிகளில் தோன்றி பக்தர்களுக்கு காட்சியளித்தார். வெண்ணைத்தாழி நிகழ்ச்சியை யாதவர் சமூகத்தாரும், செட்டி அலங்காரம் மற்றும் வெட்டுங்குதிரை நிகழ்வை, கள்ளர் சமூகத்தார் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், பெருமாளின், மங்களாசாசனம் பெற்ற, 108 ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூரில் பழமை வாய்ந்த திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி ... மேலும்
 
temple news
திருச்சி; ஆழ்வார்களால் பாடப்பெற்றதும், 108 திவ்ய தலங்களுள் ஒன்றானதாகவும் விளங்குவது திருவெள்ளரை ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் மகாமுத்து வராகி அம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நடந்தது. இக்கோயில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் உபகோயிலில் கும்பாபிஷேக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar