நம்மைப் பெற்றவர் தவிர இன்னும் நான்கு பேரை தந்தை ஸ்தானத்திற்கு ஒப்பிடுகிறது சாஸ்திரம். ஏதாவது ஒரு ஆபத்தில் சிக்கியவன், அங்கே நிற்கும் பெரியவரைப் பார்த்து, நீங்கள் என் அப்பா மாதிரி, என்னைக் காப்பாற்றுங்கள், என கதறுகிறான். அவனது பயத்தை போக்கிக் காப்பவர் தந்தைக்கு சமமானவர் ஆகிறார். பூணூல் போடுவது தந்தையின் கடமை. ஒருவேளை தந்தை இல்லாத பட்சத்தில் சித்தப்பா, பெரியப்பா பூணூல் இட்டால் அவரும் தந்தைக்கு சமமானவரே. யார் ஒருவர் ஒரு குழந்தைக்கு கல்வியை ஆரம்பித்து வைக்கிறாரோ அந்த ஆசிரியரும் தந்தைக்கு சமமானவர். ஒருவன் பசியாய் இருக்கும் போது, யாரொருவர் உணவுஅளித்து பாதுகாக்கிறானோ அவரும் ஒரு தந்தையே. இவர்களுக்கு எல்லாம் தந்தைக்கு தரும் மரியாதையை செய்யவேண்டும்.