பாற்கடலில் வியூக மூர்த்திகள் எனப்படும் நால்வர் இருக்கின்றனர். இவர்களை ஒரு தூணுக்கு ஒப்பிடுகின்றனர். இதற்கு வியூக யூக ஸ்தம்பம் என்று இதற்கு பெயர் சூட்டியுள்ளனர் ஆன்மிக வல்லுநர்கள். ஸ்தம்பம் என்றால் தூண். முதல் மூர்த்தி மனிதனின் விழிப்பு நிலையைக் கவனிப்பார். இன்னொருவர் கனவுநிலையைக் கவனிப்பார். மற்றொருவர் ஆழ்ந்த தூக்கநிலையைக் கவனிப்பார். கடைசி மூர்த்தி மயக்க நிலையைக் கவனிப்பார். ஒரு மனிதன் விழித்திருக்கும்போது எல்லாம் தானே என்று மமதை கொள்கிறான். அவன் அரைகுறை தூக்கத்தில் இருக்கும்போது காணும் கனவை உண்மையென்று நம்புகிறான். ஆழ்ந்து தூங்கிவிட்டால் இறந்தவனுக்கு சமமானவனாகி விடுகிறான். மீண்டும் விழித்ததும் உறங்கியதும் நானே, விழித்ததும் நானே, இந்த உலகத்தை நானே இயக்குகிறேன் என்ற மயக்க உணர்வு கொள்கிறான். இந்த நான்கு நிலைகளும் மாறி மாறி வருகின்றன. இவற்றில் இருந்து அவனை கடத்தி இறைவனுடன் இரண்டறக் கலக்க வைக்கும் பணியை இந்த வியூக மூர்த்திகள் செய்கின்றனர்.