Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை 10ம் தேதி திறப்பு 14ம் தேதி ... கண்ணகி கோவில் விழாவில் பொங்கல் வைக்க அனுமதி கண்ணகி கோவில் விழாவில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேர் இழுக்கும் காளை மாடுகள்: ஓசூர் அருகே வினோத திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 ஏப்
2013
10:04

ஓசூர் : ஓசூர் அருகே, 800 ஆண்டு பழமையான, கர்நாடக மாநில கோவில் தேர் திருவிழாவில், பக்தர்களுக்கு பதிலாக, காளை மாடுகள், தேர்களை வடம்பிடித்து இழுக்கும் நூதன விழா, விமரிசையாக நடந்தது.

ஓசூர் அருகே, கர்நாடக மாநிலம், ஒஸ்கூரில், 800 ஆண்டு பழமையான மத்தூரம்மா கோவில் உள்ளது. இந்த கோவில், தமிழக, கர்நாடக எல்லையில் உள்ளதால், இரு மாநில பக்தர்கள் மட்டுமின்றி, வெளிமாநில பக்தர்களும் வந்து செல்கின்றனர். பொதுவாக, கோவில் தேர் திருவிழாக்களில், தேரை, பக்தர்கள் தான் வடம்பிடித்து இழுத்துச் செல்வர்.ஆனால், ஒஸ்கூர் மத்தூரம்மா கோவில் திருவிழாவையொட்டி நடக்கும் தேரோட்டத்தில், பக்தர்களுக்கு பதிலாக, காளை மாடுகள், வடம்பிடித்து இழுத்துச் செல்கின்றன.மேலும், இந்த கோவில் தேர்கள், வீதிகளில் உலா வருவதற்கு பதிலாக, நீலகிரி தோட்டங்கள், குக்கிராமங்கள், ரயில்வே தண்டாவாளங்களை தாண்டி, 10 கி.மீ., சுற்று வட்டார பகுதிகளுக்கு, காளை மாடுகள் இழுத்துச் செல்கின்றன.நேற்று, இக்கோவில் தேர்த்திருவிழா விமரிசையாக நடந்தது. தேர்த்திருவிழாவில், 500 காளை மாடுகள், 10 தேர்களை, ஒன்றன் பின் ஒன்றாக இழுத்துச் சென்றன. கோவில் தேர்கள், ஒவ்வொன்றும், 120 அடி முதல், 150 அடி உயரம் கொண்டது.

தங்கம் வழங்கிய திப்புசுல்தான் : மைசூரை தலைநகராகக் கொண்டு, ஆட்சி செய்த, திப்புசுல்தான், 17ம் நூற்றாண்டில், ஆங்கிலேயருடன் போரிட, ஒஸ்கூரில், படைவீரர்களுடன் முகாமிட்டிருந்தார். அப்போது, அவரது படை வீரர்களுக்கு, மர்ம தோல் நோய் பரவியது. பீதியடைந்த அவரது படை வீரர்கள், ஒஸ்கூர் மத்தூரம்மாவை வழிப்பட்டவுடன், அவர்களுடைய நோய் நீக்கியது. ஆச்சரியம் அடைந்த திப்புசுல்தான், 14 கிலோ தங்க நகைகளை, மத்தூரம்மா கோவிலுக்கு வழங்கினார்.திப்புசுல்தான் வழங்கிய தங்க நகைகள், ஆணைக்கல் கர்நாடக மாநில அரசு கருவூலத்தில், இன்று வரை, பாதுகாக்கப்படுகின்றன. இந்த கோவிலின் தேர்த்திருவிழா மற்றும் விஷேச திருவிழாவின் போது மட்டும், அந்த நகைகள் பாதுகாப்புடன் கோவிலுக்கு கொண்டு வரப்படும். விழா முடிந்ததும், மீண்டும் கருவூலத்திற்கு எடுத்து செல்லப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar