Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாதேவிமங்கலத்தில் தேர் ... ஈரோடு சமயபுர மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி கிராம தேவதைகளுக்கு ஆடு பலியிட்டு மக்கள் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2013
10:04

ஓசூர்: வறட்சியால், விவசாய சாகுபடிக்கும், குடிநீருக்கும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மழை வேண்டி, ஓசூர் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள், ஒன்பது கிராம தேவதைகளை ஊர்வலமாக எடுத்து வந்து, ஆடுகள் பலியிட்டு சிறப்பு பூஜை செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகாவில், இரு ஆண்டாக, தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் பெய்யவில்லை. மாவட்டத்தின் பல இடங்களில், அவ்வப்போது, மழைகள் பெய்தபோதும், ஓசூர் பகுதியில் மட்டும், மழை சுத்தமாக பெய்யவில்லை. இதனால், ஆயிரம் அடிக்கு கீழ் நிலத்தடி நீர் மட்டம் சென்றது. குடிநீருக்கும், விவசாய பணிகளுக்கும், கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மழையை சார்ந்த மற்ற விவசாய தொழில்கள் பாதிக்கப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். விவசாயிகள், நஷ்டத்தில் அடுத்தபோக சாகுபடி செய்ய முடியாமல், தவித்து வருகின்றனர். பெண்கள், குடிநீர் கிடைக்காமல், அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், ஓசூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பெரியம்மா, காளியம்மா, சக்தி காளியம்மா, கோட்டை மாரியம்மன், முனீஸ்வரன், சப்பலம்மா, பிளேக் மாரியம்மன், கங்கம்மா, எல்லம்மா ஆகிய, ஒன்பது கிராம தேவதைகளை, பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வந்து, தாசில்தார் அலுவலக சாலையில் அலங்கரித்து வைத்து, மழை வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். மேலும், மழை வேண்டி, ஆடுகளை அம்மனுக்கு பலியிட்டு, ஏழைகளுக்கு கறி, அன்னதானம் வழங்கி, பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மழையில்லாத காலத்தில், கிராம தேவதைகளை எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிப்பட்டால், மழை பெய்யும் என்பது, முன்னோர்கள் கடைபிடிக்கும் ஐதீகமாக இருப்பதால், ஒன்பது கிராம தேவதைகளை எடுத்து வந்து பூஜை செய்ததாக, பக்தர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் இன்று ஆடி மாதம் முதல் சனிக்கிழமையில் பக்தர்கள் திரளாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா துவங்கியது. வேத ... மேலும்
 
temple news
அன்னூர்; ஆடி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar