துலுக்கான மாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர் செய்யும் பணி மும்முரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2013 10:04
திருபுவனை: மதகடிப்பட்டுப்பாளையத்தில் உள்ள துலுக்கான மாரியம்மன் கோவிலுக்கு புதிய தேர் செய்யும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. மதகடிப்பட்டுப்பாளையம் கிராமத்தில் துலுக்கான மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் இருந்த நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தேர் சேதமடைந்து வீணானது. இதையடுத்து, புதிய தேர் செய்ய கிராம மக்கள் முடிவு செய்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி புதிய தேர் செய்யும் பணி துவங்கியது. இலுப்ப மரம் மற்றும் கருவேலம், அத்தி, தேக்கு உள்ளிட்ட மரங்களைக் கொண்டு புதிய தேர் செய்யும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. தேரில் சுவாமி சிலைகளின் மர சிற்பங்கள் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.புதிய தேர் வெள்ளோட்டம் வரும் 25ம் தேதி நடக்க உள்ளது. கோவில் சிறப்பு அதிகாரி சக்கரவர்த்தி, திருப்பணி கமிட்டி பொறுப்பாளர் கோதண்டராமன் தலைமையில் தேர் செய்யும் பணி நடக்கிறது.