Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாவீர் ஜெயந்தி விழா கோவையில் ... மாரியம்மன் கோவிலில் கம்பம் ஸ்தாபனம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2013
11:04

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி "பூ மிதித்தனர். பொள்ளாச்சி அடுத்த போடிபாளையம் பத்திரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 8ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. 9ம் தேதி அம்மன் கொலு வைத்தும், சக்தி கும்பம் முத்தரிக்கப்பட்டும் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவை ஒட்டி, பல்வேறு தலங்களில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் இரவு 60 அடி நீளமும், நான்கு அடி அகலமும் கொண்ட குண்டத்தில் "பூ வளர்க்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த பொருட்களை கொண்டு வந்து குழியிலிட்டு பூ வளர்த்தனர். இரவு 9.00 மணிக்கு சிங்க வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் முக்கியப்பகுதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை 7.00 மணிக்கு அக்னி கும்பம் கொண்டு வரப்பட்டது. முதலில் அருளாளிகள் பூப்பந்து உருட்டிவிட்டு, குண்டத்தில் இறங்கி பூ மிதித்தனர். தொடர்ந்து, விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் "பூ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பின், அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. மாலை 4.00 மணிக்கு அம்மனுக்கு மாவிளக்கு படைத்து பக்தர்கள் வழிபட்டனர். இன்று இரவு இரட்டை கிடா வெட்டி சக்தி கும்பம் கங்கையில் விடப்படுகிறது. நாளை (26ம் தேதி) காலை மகா அபிஷேக ஆராதனையுடனும், மஞ்சள் நீராட்டுதலுடனும் விழா நிறைவடைகிறது. குண்டத்தையொட்டி, போடிபாளையம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar