Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அல்லல் தீர்த்த அய்யனார் கோயில் கொடை ... தேவி கருமாரியம்மன் கோவில் அன்னதான கட்டட பணி துரிதம்! தேவி கருமாரியம்மன் கோவில் அன்னதான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரங்கா ரங்கா கோஷம் விண்ணை பிளக்க.. ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 மே
2013
09:05

திருச்சி: பக்தர்களின் ரங்கா ரங்கா கோஷம் விண்ணை பிளக்க, ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் விசேஷம் என்றாலும், வைகுண்ட ஏகாதசி திருவிழாவும், விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேரோட்ட திருவிழாவும் வெகு பிரசித்திப் பெற்றது. விஜயநகர அரசரான இரண்டாம் ஹரிஹரனின் மகன் விருபாஷன் என்ற விருப்பண்ண உடையார், ஸ்ரீரங்கம் கோவில் புனர் நிர்மாணத்துக்காக ஏராளமான நன்கொடைகள் வழங்கியுள்ளார். தம்முடைய பெயரால் சித்திரை மாதத்தில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தை, கி.பி. 1383 ஆண்டு ஏற்படுத்தி வைத்தார். ஆயிரம் ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து நடக்கும் விருப்பன் திருநாள், கடந்த, 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில், உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் பல்வகை வாகனங்களில் எழுந்தருளி, ஆஸ்தான மண்டபகங்களில் மண்டகப்படி கண்டருள்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத்தேரோட்டம் நேற்று நடந்தது. அதிகாலை, 4 மணிக்கு, நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து திருத்தேருக்கு புறப்பாடு கண்டருளினார். 4.30 மணிக்கு, சித்திரைத்தேர் மண்டபத்தை சென்றடைந்தார்.

அதிகாலை, 4.45 முதல், 5.15 மணிக்குள் மேஷ லக்னத்தில், நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். காலை, 6 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. பக்தர்களின் "ரங்கா ரங்கா கோஷம் விண்ணை பிளக்க, மக்கள் வெள்ளத்தில் தேர் ஆடி அசைந்து சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. தேர் நிலைக்கு வந்தவுடன் ரேவதி மண்டபத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார். பாண்டியன் கொண்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கிளி மாலை, நீல நாயகம் உள்ளிட்ட ஆடை அணிகலன்களுடன் வீற்றிருந்த நம்பெருமாளை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸேவித்தனர். சித்திரைத்தேர் திருவிழாவையொட்டி நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்திருந்தனர். பக்தர்களின் தாகம் தணிக்கும் வகையில், ஏராளமான இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டு, நீர், மோர், பானகம் வழங்கப்பட்டன. ஸ்ரீரங்கம் போலீஸ் ஏ.சி., ஜெயச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கல்யாணி மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா இன்று ... மேலும்
 
temple news
 காரைக்குடி;குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
 பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திரத் தேர்திருவிழாவை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நேற்று துவங்கி ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar