பதிவு செய்த நாள்
22
மே
2013
11:05
ராசிபுரம்: ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு, ஸ்வாமி தர்மசம்வர்தினி சமேதராக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், பாலதண்டாயுதபாணி ஸ்வாமி, உட்கோவிலாக அமைந்துள்ளது. ஆண்டு தோறும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா, மே 24ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 8 மணிக்கு, விநாயகர் மற்றும் யஜமான பூஜை, காயத்திரி ஹோமம், பூர்ணாகுதி நடக்கிறது. அதை தொடர்ந்து, காலை, 11 மணிக்கு, கைலாசநாதர், தர்மசம்வர்தினி ஆகிய தெய்வங்களுக்கு கலசாபிஷேகமும், சண்முக சுப்ரமணியருக்கு, 108 வலம்புரி சங்கு அபிஷேகம், பாலதண்டாயுதபாணிக்கு ஸ்வாமிக்கு, விசாக தீர்த்த அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேதராக, ஸ்வாமி ரதத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.