நாகப்பட்டினம்: சக்தி பீடங்கள் அறுபத்து நான்கினுள் ஒன்றான, நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலில், வைசாசி விழாவை ஒட்டி, தேரோட்டம் கோலாகலமாக நேற்று நடந்தது. நாகை, நீலாயதாட்சி உடனுறை காயாரோகண சுவாமி கோவிலில், வைகாசி விசாக திருவிழா, கடந்த 5ம் தேதி, ஐயனார் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று, தேரோட்டம் நடந்தது. இதை முன்னிட்டு, தியாகராஜ சுவாமி, திருத்தேரில் எழுந்தருளினார். சுவாமிக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தன. கலெக்டர் முனுசாமி வடம் பிடித்து, தேரோட்டத்தைத் துவக்கி வைத்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.