Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்வமுத்து மாரியம்மன் கோவில் ... பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி ஊரை காலி செய்த கிராம மக்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2013
11:05

கிருஷ்ணகிரி: மழை வேண்டி பொதுமக்கள், ஊரை காலி செய்து விட்டு, வலசை சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மழை பொய்த்து போகும் போது, மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மழைவேண்டி, ஊரை காலி செய்து விட்டு அருகில் உள்ள வனப்பகுதி அல்லது தோட்டத்திற்கு செல்லும் நிகழ்ச்சி (வலசை)யை காலம் தொட்டு நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில், போதிய மழையில்லாததால், கிருஷ்ணகிரி அடுத்த மேல் பட்டியில், நேற்று மழை வேண்டி பொதுமக்கள் வலசை சென்றனர். நேற்று காலை, வீடுகளை பூட்டி விட்டு, கால்நடைகளுடன் பொதுமக்கள் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றனர். இதனால், மேல்பட்டி கிராமமே வெறிச்சோடி காணப்பட்டது. வலசை சென்ற பொதுமக்கள், தோட்ட பகுதியில் சமையல் செய்து மதிய உணவை சாப்பிட்டனர். இந்நிகழ்ச்சியில், மேல்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமன்றி அவர்களது உறவினர்களும் கலந்து கொண்டனர். வலசை சென்ற தோட்டம் பகுதியில் பொறி கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை வியாபாரிகள் வைத்திருந்தனர். மாலை நேரத்தில் அங்குள்ள அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்த பொதுமக்கள், ஆடு பலியிட்டு ஊர் திரும்பினர். இவ்வாறு செய்தால், மழை பெய்யும் என்பது ஐதீகம், என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar