Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகுண்ட பெருமாள் கோவிலில் கருடசேவை ... சிதிலமடைந்து வரும் கோதண்டராம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்காமீசுவரர் கோவில் திருப்பணி தொழில் நுட்பக் கமிட்டி ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2013
12:06

புதுச்சேரி: வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவில் திருப்பணிகளை, தொழில் நுட்பக் கமிட்டியினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.வில்லியனூரில் உள்ள கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் கோவில், 11ம் நூற்றாண்டில், தர்மபாலன் சோழனால், 4.33 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது.நூற்றாண்டு கண்ட திருக்காமீஸ்வரர் கோவிலை புனரமைக்க, இந்து அறநிலையத் துறை சார்பில் 11 கோடி ரூபாய் செலவில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, முன்மண்டபம், சூரப்பிள்ளையார், சண்முகனார் சன்னதி உள்பட 10 புனரமைப்பு பணி நடந்து வருகிறது .கோவில் திருப்பணிகளை இந்து அறநிலைத் துறை ஆணையர் மோகன்தாஸ், தொழில்நுட்பக் கமிட்டி தலைவரும் கண்காணிப்பு பொறியாளருமான மாந்தையன், செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி, இளநிலைப் பொறியாளர் செல்வராஜ், மகாபலிபுரம் சிற்ப கலைக் கல்லூரி பேராசிரியர் பத்பநாபன் உள்ளிட்டோர் அடங்கிய கமிட்டியினர் நேற்று பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர். அவர்களை வரவேற்ற கோவில் சிறப்பு அதிகாரி மனோகரன், திருப்பணிகளை விவரித்தார். ஆலோசனையின்போது முன்மண்டபம் அருகே புனரமைப்புக்காக இடிக்கப்பட்ட 11 அடி உயர சூரப்பிள்ளையார் சன்னதி, சண்முகனார் சன்னதி பின்புறம் பழமையான கட்வெட்டுகள் இருப்பதால் அவற்றில் படிந்துள்ள மணலை அப்புறப்படுத்தி, பக்தர்களுக்கு பார்வையில் வைக்கவும், சன்னதிகளை 2.15 அடி முன்னதாக அமைக்கவும் முடிவெடுக்கப்பட்து.திருப்பணிகள் குறித்து தொழில்நுட்பக் கமிட்டி அதிகாரிகள் கூறும்போது, " கோவில் வெளிபிரகாரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருண்டுபோய் காணப்பட்டது. இதன் எதிரொலியாக எட்டு இடங்களில், எடுத்துக் கட்டி மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், நான்கு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மூலவரை ஒட்டியுள்ள சண்முகனார் சன்னதியில் மேற்கூரை மரப்பலகையால் அமைக்கப் பட்டுள்ளதால் வலுவிழந்துள்ளது. இதை கற்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம்  நான்காம் சனிக்கிழமை என்பதால்  இலவச தரிசனத்திற்கு 20 ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; புரட்டாசி மாதம்  கடைசி சனிக்கிழமையை ஒட்டி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய ... மேலும்
 
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar