பதிவு செய்த நாள்
24
ஜூன்
2013
10:06
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஊஞ்சல் திருவிழா நிறைவாக நேற்று முப்பழ பூஜை நடந்தது. ஜூன் 14ல் துவங்கிய ஊஞ்சல் திருவிழாவில், தினமும் இரவு 7 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையின் ஊஞ்சலாட்டம் நடந்தது. நேற்று முப்பழ பூஜை நடந்தது. மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் உட்பட அனைத்து தெய்வங்களின் முன்பும் மா, பலா, வாழை பழங்கள் படைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. வழக்கமாக, முப்பழ பூஜை தினத்தன்று இரவு 7 மணிக்கு யானை மண்டபத்தில் சுவாமி எழுந்தருளி, சிறப்பு அபிஷேகங்கள் முடிந்து சர்வ அலங்காரமாகி, கோயில் யானைக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்படும். இந்த ஆண்டு யானை இல்லாததால், சுவாமி புறப்பாடு இல்லை. இரவு 7 மணிக்கு சிம்மாசனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தனர்.