Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூவராக சுவாமி கோவிலில் ... மூலநாதர் கோவில் நாயன்மார்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி நரசிம்மர் கருட வாகனத்தில் சொர்க்க வாசல் கடந்து சேவை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2013
10:06

வங்கனூர்: கனகவல்லி நாயகி உடனுறை லட்சுமி நரசிம்மர், கருட வாகனத்தில் நேற்று அதிகாலை, சொர்க்கவாசலை கடந்து சேவை சாதித்தார். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்துடன் இணைந்தது, வங்கனூர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில். மூன்று ஆண்டுகளுக்கு முன், சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆனி மாத பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இரண்டாம் ஆண்டு ஆனி மாத பிரம்மோற்சவம் கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் திருமஞ்சனமும் மற்றும் இரவு சிம்மம், அனுமன், சேஷ வாகனம் உள்ளிட்டவற்றில் சுவாமி வலம் வருகிறார். நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் லட்சுமி நரசிம்மர், கருட வாகனத்தில் சொர்க்க வாசலை கடந்து சேவை சாதித்தார். கோவில் கோபுரம் முன்பாக காத்திருந்த திரளான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள், "கோவிந்தா,கோவிந்தா என, விண்ணதிர கோஷம் எழுப்பினர். கருட சேவையை முன்னிட்டு, திருப்பதி தேவஸ்தான பஜனை கோஷ்டியினர், நாட்டியம் ஆடியபடி பஜகோவிந்தம் பாடி வந்தனர். கரகாட்டம், வாணவேடிக்கையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி ஊர்வலம் நடந்தது. இரவு யானை வாகனத்தில் உலா வந்தார். விழாவில், வங்கனூர், ஆர்.கே.பேட்டை, சந்தானவேணுகோபாலபுரம், எஸ்.பி.கண்டிகை உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் மற்றும் திருத்தணி தேவஸ்தான இணை ஆணையர் புகழேந்தி, தக்கார் ஜெய்சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar