Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கேதாரகவுரி கோவில் 10ல் கும்பாபிஷேகம் கீழ் குந்தா கிராமத்தில் தெவ்வப்பா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனி அமாவாசையை முன்னிட்டு கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2013
10:07

சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நேற்று ஆனி அமாவாசையை முன்னிட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் குவிவர். நேற்று ஆனி அமாவாசை என்பதால், காலை ஆறு மணி முதலே, பண்ணாரி மாரியம்மனை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர்.மதியம் உச்சி பூஜை நேரத்தில் கோவிலை சுற்றிலும், நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து, அம்மனை தரிசனம் செய்தனர். ஆனி அமாவாசையை முன்னிட்டு, நேற்று பண்ணாரி மாரியம்மனுக்கு, தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. சத்தியமங்கலத்தில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. திம்பம் மலைப்பாதையின் முதலாவது கொண்டை ஊசி வளைவின் தொடக்கத்தில் இருந்து, நான்கு கி.மீ., தூரம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு பண்ணாரி என்றழைக்கப்படும், பேளேரி அம்மன் கோவிலிலும் பக்தர்கள் குவிந்து, அம்மனை தரிசித்து சென்றனர்.இதேபோல், பவானி கூடுதுறையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காசிக்கு அடுத்தபடியாக உள்ள பரிகார ஸ்தலம் என்பதால், அதிகாலை முதலே கூடுதுறையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், வறண்டிருந்த கூடுதுறையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.பொதுமக்கள் பலரும் கூடுதுறையில் குளித்து, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar