Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விரத நாளில் டிபன் சாப்பிடும் ... இடைக்காட்டூர் கோயிலில் திருக்குட முழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா! இடைக்காட்டூர் கோயிலில் திருக்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு கொடியேற்றம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2013
10:07

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் நேற்று அரியும், சிவனும் ஒன்று என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலும் ஒன்று. இங்கு சங்கரலிங்கசுவாமி, கோமதிஅம்பாள் சமேதரராக இருந்து அருள்பாலித்து வருகின்றனர். முன்னொரு காலத்தில் சிவன், விஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்று பக்தர்களிடையே சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சை பக்தர்களிடையே மோதலாகவும் மாறியது. இதனால் மனம் வருந்திய அன்னை கோமதி, சிவன், விஷ்ணு இருவரும் ஒன்று பக்தர்களுக்கு காட்சி அளிக்க வேண்டும் என்று சங்கரலிங்கசுவாமிக்கு கோரிக்கை வைத்தார். அம்பாளின் கோரிக்கையை ஏற்ற சுவாமி அம்பாளை ஒற்றைக்காலில் தபசு இருக்க வேண்டும் என்று கூறினார். தபசு இருந்த அம்பாளுக்கு சங்கரலிங்கசுவாமி, “அரியும், சிவனும் ஒன்று என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் பொருட்டு தனது உடலின் ஒரு பகுதியை சிவனாகவும், மற்றொரு பகுதியை விஷ்ணுவாகவும் மாற்றி சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். இந்த அரிய நிகழ்ச்சி தான் ஆண்டுதோறும் “ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு திருவனந்தல் நடந்தது. பின்னர் கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து ரதவீதிகளில் கொடிபட்டம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. காலை 7.36 மணிக்கு கோமதிஅம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் திருவிழாவிற்கான கொடியை சரவணன்பட்டர் ஏற்றினார். கொடிமரத்தில் தர்ப்பைபுல் மற்றும் பட்டுத்துணி சுற்றப்பட்டது. கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை பாடினர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனையான “சோடச தீபாராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவ திருவிழா மே 13ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar