பதிவு செய்த நாள்
15
ஜூலை
2013
10:07
பரமக்குடி: சுந்தரராஜப் பெருமாள் கோயிலில், ஆடி பிரம்மோத்சவ திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு அனுக்கை, வாஸ்து சாந்தி நடந்து, நேற்று காலை 9.30மணிக்கு துலா லக்னத்தில் கொடி மரத்தில் கருடக்கொடியை ஏற்றினர். பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை பெருமாள் மோகினி அலங்காரத்துடன் அன்ன வாகனத்திலும், தொடர்ந்து தினமும் காலை, மாலை சிங்க, சேஷ, கருட, அனுமான், யானை, பல்லக்கு, குதிரை வாகனங்களில் வீதியுலா நடைபெறும். 19ல் இரவு 7மணிக்கு ஆண்டாள் மாலை மாற்றல், 21ல் காலை முத்துப்பல்லக்கில் நவநீதகிருஷ்ணன் சேவை, 22ல் காலை 9மணிக்கு தேரோட்டம் நடைபெறும். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.