உடுமலை: உடுமலை தில்லை நகரில், சாய்பக்தர்கள் சார்பில் கட்டப்பட்ட சீரடி ஆனந்தசாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு பிம்பசுத்தி, ரஷாபந்தனம், நாடிசந்தானம், இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹுதி, மகாதீபாரதனை ஆகிய சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 9:10 மணிக்கு யாக சாலையில் இருந்து திருகலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 9:30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. நிகழ்ச்சியில், சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். காலை 10:30 மணி முதல் ருத்ரப்பநகர் ஜி.டி.வி., திருமண மண்டபத்தில் அன்னதானம் நடந்தது. காலை 11.00 மணிக்கு மகாபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை, பஜனை, ஆரத்தி ஆகிய சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மாலை 6:00 மணிக்கு சாய் பஜனை நிகழ்ச்சி நடந்தது.