Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்குடி கோயிலில் பச்ச மஞ்சள் ... உடுமலை அருகே 8ம் நூற்றாண்டு நந்தி சிலை கண்டுபிடிப்பு! உடுமலை அருகே 8ம் நூற்றாண்டு நந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேரளாவில் நான்கு கோயில் தரிசனம்: ஆடியில் பக்தர்கள் குவிகின்றனர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2013
10:07

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே, இரிஞ்ஞாலக்குடா கூடல்மாணிக்கம் கோயிலில், ஆடி திருவிழா துவங்கியது. இங்குள்ள பரதன் கோயில் உட்பட அருகில் உள்ள கோயில்களில், "நான்கு கோயில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.கேரளாவில் ஆடி மாதம், ஆன்மிக மாதமாக கருதப்படுகிறது. இதனை "ராமாயண மாதம் என்று அழைக்கின்றனர். வீடுகளில் மாலை நேரம், ராமாயணம் வாசிக்கப்படும். அம்மன்கோயில்கள் போன்று, ராமர், பரதன், லட்சுமணன், சத்ருகனன் சுவாமிகளிலும் ஆடி மாதம் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். இந்த நான்கு கோயில்களையும், ஒரே நாளில் தரிசனம் செய்வது "நாலம்பல தரிசனம்(நான்கு கோயில் தரிசனம்) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு தரிசனம் செய்வது, புண்ணியம் தரும் என்பது ஐதீகம்.

திருச்சூர் அருகே திருப்பறயாரில் உள்ள ராமர், இரிஞ்ஞாலக்குடா கூடல்மாணிக்கம் கோயிலில் உள்ள பரதன், எர்ணாகுளம் மாவட்டம் முழிக்குளத்தில் உள்ள லட்சுமணன், திருச்சூர் பாயம்பலத்தில் உள்ள சத்ருகனன் கோயில்களில் ஒரே நாளில் சுவாமி தரிசனம் செய்ய, நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஒரு மாதம் இந்த சிறப்பு தரிசனம் நடக்கும்.இந்த கோயில்களில் தீபவழிபாடு, அவல் பாயாச வழிபாடு, வெடி நேர்ச்சை வழிபாடு, புஷ்பாஞ்சலி போன்றவை பிரபலமானது.

அதிகாலை 3.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், கோயில்கள் திறந்து இருக்கும்.இரிஞாலக்குடா பரதன் கோயில் பூஜை விபரங்கள் அறிய, 0480- 282 2631. கேரள அரசு போக்குவரத்துக்கழகம், காலை 6 மணிக்கும், 6.30 மணிக்கும் இங்கிருந்து, நான்கு கோயில்களையும் இணைத்து பஸ்களை இயக்குகிறது. தனியார் வாகனங்களும் இயக்கப்படுகின்றன. திருச்சூர்-கொடுங்கல்லூர் நெடுஞ்சாலையில் இரிஞாலக்குடா உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லுாரி தமிழ் துறை தலைவர் காளிதாஸ், ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவ பத்தாம் ... மேலும்
 
temple news
 சென்னை: மாசி மக தீர்த்தவாரி உத்சவம் மகம் நட்சத்திரத்தில் சில கோவில்களிலும், மகம் மற்றும் பவுர்ணமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar