பதிவு செய்த நாள்
31
ஜூலை
2013
10:07
மறைமலை நகர்: மறைமலை நகர் கல்யாணமுருகன் கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு, மூன்று நாட்களாக லட்சார்ச்சனை விழா நடைபெற்றது. மறைமலை நகர் அடுத்த ரயில்நகர் பகுதியில் கல்யாண முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆடி கிருத்திகையை முன்னிட்டு, 19 ஆண்டு லட்சார்ச்சனை மூன்று நாட்கள் திருவிழாவாக துவக்கப்பட்டது. இதில், முதல் நாளான நேற்று முன்தினம் காலை 6:15 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் லட்சார்ச்சனை துவங்கப்பட்டது. இரண்டாம் நாளான நேற்றும் லட்சார்ச்சனை தொடர்ந்து நடைபெற்றது. இதில், மறைமலை நகர் பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமிக்கு அர்ச்சனை செய்தனர். மேலும், ஆடி கிருத்திகையை முன்னிட்டு தினந்தோறும் மாலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் பக்தி சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான இன்று, காலை 10:00 மணிக்கு, 108 பால்குட அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.