பாகூர்:சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் கோவில் செடல் மற்றும் தேர் திருவிழா நடந்தது.பாகூர் அடுத்துள்ள சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வந்தது. முக்கிய நிகழ்வான செடல் மற்றும் தேரோட்டம் நடந்தது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு செடல் போட்டுக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மாட வீதிகள் வழியாக தேர் வீதியுலா நடந்தது. நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் ராஜவேலு கலந்து கொண்டனர்.