பதிவு செய்த நாள்
05
ஆக
2013
10:08
ஆர்.கே.பேட்டை:சுந்தரவல்லி, விஜயவல்லி சமேத சுந்தரராஜ பெருமாள் கோவிலில் பவித்ரோற்சவம் நேற்று துவங்கியது. இன்று, சுவாமிக்கு திருமஞ்சனம் புறப்பாடு நடக்கிறது.ஆர்.கே.பேட்டை, பிராமணர் தெருவில் உள்ள சுந்தரவல்லி, விஜயவல்லி சமேத சுந்தரராஜ பெருமாள் கோவிலில், நேற்று பவித்ரோற்சவம் துவங்கியது.விழாவையொட்டி, காலை, 5:00 மணிக்கு, அங்குரார்ப்பணம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பட்டு வஸ்திரம் மற்றும் தங்க கவசம் சாற்றப்பட்டது.இன்று காலை, 9:00 மணிக்கு, சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கிறது. 10:00 மணிக்கு பவித்ரமூர்த்தி வாஸ்து, மகாநிவேதனம், தீர்த்த பிரசாத வினியோகம் செய்யப்படும். மாலை, 5:00 மணிக்கு, சுவாமி புறப்பாடு நடக்கிறது. 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெறும். நாளை, யாத்ரா தானம், பத்ம பிரதக்ஷனத்துடன் பவித்ரோற்சவம் நிறைவு பெறுகிறது.